வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மே 11 (May 11)

#people #history #Lanka4 #World
Prasu
6 hours ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மே 11 (May 11)

கிரிகோரியன் ஆண்டின் 131 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 132 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 234 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 330 – பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது.
  • 868 – டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும்.
  • 912 – அலெக்சாந்தர் பைசாந்தியப் பேரரசராக முடி சூடினார்.
  • 1310 – பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னர் தேவாலய புனித வீரர்கள் 54 பேரை சமயமறுப்பிற்காக உயிருடன் எரித்தார்.
  • 1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை அமெரிக்கக் கண்டம் நோக்கி ஆரம்பித்தார்.
  • 1672 – பிரான்சின் பதினான்காம் லூயி இடச்சுக் குடியரசை முற்றுகையிட்டான்.
  • 1745 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலோ-இடச்சு-அனோவர் படைகளைத் தோற்கடித்தன.
  • 1812 – இலண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் இசுப்பென்சர் பெர்சிவல் ஜோன் பெல்லிங்கம் என்பவனால் கொல்லப்பட்டார்.
  • 1833 – பிரித்தானியாவின் லேடி ஒஃப் த லேக் பயணிகள் படகு நியூபவுண்ட்லாந்து தீவுக் கரையில் பனிமலை ஒன்றின் மீது மோதி மூழ்கியதில் 265 பேர் உயிரிழந்தனர்.
  • 1846 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்க அரசுத் தலைவர் ஜேம்ஸ் போக் மெக்சிக்கோ மீது போரை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். மே13 இல் போருக்கு அனுமதி கிடைத்தது.
  • 1857 – சிப்பாய்க் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் தில்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
  • 1858 – மினசோட்டா அமெரிக்காவின் 32வது மாநிலமாக அனுமதிக்கப்பட்டது.
  • 1891 – சப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த உருசிய இளவரசர் நிக்கொலாசு சப்பானியக் காவல்துறையினனின் வாள் வீச்சில் இருந்து தப்பினார். இவர் கிரேக்க, டென்மார்க் இளவரசர்களினால் காப்பாற்றப்பட்டார்.
  • 1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
  • 1924 – மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றின.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: ஒக்கினாவா கரையில் அமெரிக்க வானூர்தித் தாங்கிக் கப்பல் மீது சப்பானிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 346 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1949 – சியாம் நாடு தாய்லாந்து என இரண்டாவது தடவையாகப் பெயர் மாற்றம் பெற்றது.
  • 1953 – டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
  • 1960 – முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
  • 1972 – ஐக்கிய அமெரிக்கா அணுகுண்டு சோதனையை நெவாடாவில் நடத்தியது.
  • 1985 – இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் உயிரிழந்தனர்.
  • 1995 – 170 நாடுகள் அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
  • 1996 – எவரெசுட்டு சிகரத்தில் இடம்பெற்ற பனிப்புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
  • 1996 – மியாமியில் இருந்து புறப்பட்ட விமானம் தீப்பிடித்து வீழ்ந்ததில் அனைத்து 110 பயணிகளும் உயிரிழந்தனர்.
  • 1997 – ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
  • 1998 – இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத்தியது.
  • 2011 – எசுப்பானியாவில் லோர்க்கா என்ற நகரில் இடம்பெற்ற 5.1 அளவு நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
  • 2013 – துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2014 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கின்சாசா நகரில் காற்பந்து விளையாட்டரங்கில் இடம்பெற்ற நெரிசலில் 15 பேர் உயிரிழந்தனர்.


பிறப்புகள்

  • 1669 – ஜேம்சு புரூசு, உருசிய அரசியலாளர் (இ. 1735)
  • 1824 – ஜீன் லியோன் ஜேர்மி, பிரான்சிய ஓவியர், சிற்பி (இ. 1904)
  • 1875 – ஹரியெட் குயிம்பி, அமெரிக்க விமான ஓட்டி, எழுத்தாளர் (இ. 1912)
  • 1881 – தியோடர் வான் கார்மன், அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1963)
  • 1897 – சுத்தானந்த பாரதியார், கவிஞர், கவியோகி (இ. 1990)
  • 1897 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (இ. 1985)
  • 1904 – சால்வதோர் தாலீ, எசுப்பானிய ஓவியர் (இ. 1989)
  • 1908 – சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர், தமிழறிஞர் (இ. 1975)
  • 1909 – எல்லிஸ் ஆர். டங்கன், அமெரிக்கத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2001)
  • 1912 – சாதத் ஹசன் மண்ட்டோ, இந்திய-பாக்கித்தானிய எழுத்தாளர் (இ. 1955)
  • 1918 – மிருணாளினி சாராபாய், இந்திய நடனக் கலைஞர், பயிற்றுனர் (இ. 2016)
  • 1918 – ரிச்சர்டு பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)
  • 1924 – அந்தோனி எவிழ்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வானியலாளர், இயற்பியலாளர்
  • 1992 – தீபோ கூர்த்துவா, பெல்சியக் காற்பந்தாட்ட வீரர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746913705.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!